Friday, March 13, 2020

அமரர் சின்னத்தம்பி செல்லத்துரை மரண அறிவித்தல்!


பன்னாலையை பிறப்பிடமாகவும் தாவடி பிரான்ஸ் இந்தியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்லத்துரை இன்று காலை காலமானார்!அன்னார் பன்னாலை சின்னத்தம்பியின் மகனும் தட்டாதெருவில் அமைந்துள்ள பற்றிக்கடை(செல்வம்ஸ்) உரிமையாளர்களது சகோதரனும்(அன்னாருக்கு நான்கு சகோதரரும் இரு சகோதரிகளும் ) தா வடியை சேர்ந்த சாக்கன் ரத்தினத்தின் மகளான அமரர் தவமணியின்( கணவரும் மோகன்ராஜ்(பிரான்ஸ்) ,உஷாராணி(இலங்கை),சோதிராஜ்(பிரான்ஸ்), யசோராணி(கனடா),நிமலராணி  (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்!

மேலும் பாசமுள்ள மருமக்கள்,பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து சில காலத்தின் முன் மனைவியான தவமணியை இழந்த அன்னார் இன்று இறைபதமடைந்தார்!

அவரின் இறுதிக்கிரியைகள் வரும் திங்களன்று 16-03-2020 இடம்பெறும் என்பதை மிக வருத்தத்துடன் அறியத்தருகின்றனர் அவர் குடும்பத்தினர்!




No comments:

Post a Comment