Sunday, March 15, 2020

சின்னத்தம்பி செல்லத்துரை மரண அறிவித்தல்!


தாவடி தெற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்லத்துரை 13-03-2020 வெள்ளிக்கிழமை காலமானார்!
அன்னார் காலஞ்சென்றவர்களான பன்னாலை சின்னத்தம்பி சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான ரத்தினம் ,ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற தவமணியின் (ஆசிரியை,உப அதிபர்-தாவடி தமிழ்க்கலவன் பாடசாலை)அன்புக்கணவரும் மோகன்ராஜ்,உஷாராணி,சோதிராஜ் ,யசோராணி,நிமலராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிவந்தி,காலஞ்சென்ற கிருபாகரன்,ஜெயகலா,சிவராமேஸ்வரன்,உதயகுமார் ஆகியோரின் திருமணவழி மாமனும் நிவேதா,தர்சன்,அபிராமி,தரன்,ரிஷி,கேசிகன்,யசிகன் ,அரசன்,அக்ஷயன் ஆகியோரின் பேரனும் காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம்,செல்வநாயகி,மகேந்திரன், மற்றும் செல்வநாயகம்(செல்வம்ஸ் பற்றி உரிமையாளர்) ,செல்வராணி,சுந்தரலிங்கம் ஆகியோரின் சகோதரரும் அமரர்களான சுந்தரலிங்கம்,சிவபாக்கியம் ,பஞ்சலிங்கம்,சொர்ணலிங்கம் மற்றும் செல்லமணி ஆகியோரின் திருமணவழி  மைத்துனருமாவார்!

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் நாளை திங்கள்கிழமை 16-03-2020 அன்று 9 மணியளவில் அவர் இல்லத்தில் (பாடசாலை ஒழுங்கை,ஐந்துவேம்படி,தாவடி தெற்கு கொக்குவில்) இடம்பெற்று தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமாகும்!

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொண்டு இறுதிசடங்கில் கலந்துகொள்ளுமாறு அவர் குடும்பத்தினர் வேண்டுகின்றோம்!

தகவல்

குடும்பத்தினர்!

தொடர்புகளுக்கு:

சோதி(baay ):0033606814040
யசோ:0016472846665
நிமா:0014165196729





No comments:

Post a Comment