Wednesday, May 23, 2018

இன்னொரு ஈழம் உருவாகிவிட கூடாது: கண்ணீருடன் பதிவிட்ட தமிழ் பெண்!!


தமிழர்கள் திட்டமிடப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்படுவதாக தமிழ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை தற்போது தமிழகத்தில் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள் இன்றைய தினம் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில், போராட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக 11 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து முகபுத்தகம் வாயிலாக குறித்த பெண் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






தொடர்ந்தும் பேசிய அவர், “அப்பாவி பொது மக்கள் சாவடிக்கப்பட்டுள்ளனர். அமைதியான வழியில் போராட வேண்டும் என்று இருந்த எங்களை சுட்டுகொன்றுள்ளனர். இதன் மூலம் தமிழர்களை தீவிரவாதியாக்க முயற்சிக்கின்றனர்.
இது திட்டமிட்ட சதி நடவடிக்கை. இலங்கையில் என்ன நடந்ததோ அது தமிழ் நாட்டிலும் நடக்கும். இந்நிலையில், அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டியாகவேண்டும்.
இது தற்செயலாக நடந்த ஒன்று அல்ல. முற்றிலும் திட்டமிடப்பட்ட ஒரு செயல். அடுத்து ஒரு புரட்சி வெடிக்க வேண்டும். இன்னொரு ஈழம் இங்கு உருவாக கூடாது.
எனவே, இன்னுமொரு பாலச்சந்திரனையும், இசைப்பிரியாவையும் நாம் பறிகொடுத்துவிட கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/community/01/183315?ref=imp-news


No comments:

Post a Comment