தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், நகர் முழுவதும் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், போராட்டக்களத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள வீடியோவில் இடம்பெற்றுள்ள வார்த்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டக்காரர்கள் சிதறி ஒடிக்கொண்டிருக்க பொலிஸ் வேன் மீது காவலர் ஒருவர் துப்பாக்கியுடன் ஏறுகிறார். அவர் பின்னால் இருந்து நபர் ஒருவர், ஒருத்தனாவது சாவனும் என்கிறார்.
அவர் அவ்வாறு கூறிமுடிக்க பொலிஸ் குறிபார்த்து சுட ஆரம்பிக்கிறார். மேலும் வானத்தை நோக்கி சுட்டு கலவரத்தை கட்டுப்படுத்தாமல், மக்களின் உயிருடன் இப்படி காவல்துறை விளையாடியுள்ளது களங்கமான ஒன்று என சமூகஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
#WATCH Local police in Tuticorin seen with assault rifles to disperse protesters demanding a ban on Sterlite Industries. 9 protestors have lost their lives. #TamilNadu. (Earlier visuals) pic.twitter.com/hinYmbtIZQ— ANI (@ANI) May 22, 2018
http://news.lankasri.com/india/03/179429?ref=rightsidebar-manithan
No comments:
Post a Comment