Sunday, May 27, 2018

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: கவலை தெரிவித்த ஐ.நா அதிகாரி


தமிழகத்தின் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் போன்று இனியும் நிகழக்கூடாது என கவலை தெரிவித்துள்ளார் ஐ.நா உயரதிகாரி.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய ஐ.நா சுற்றுச்சூழல் திட்டங்களின் தலைமை இயக்குனர் எரிக் சோல்ஹெய்ம், தூத்துக்குடி சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொலிசார் அடக்குமுறையை கையாளக்கூடாது, ஸ்டெர்லைட் விவகார பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
கேரளாவின் கொச்சியில் உருவாகும் சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் சர்வதேச விமான நிலையத்தை பார்வையிட வந்தபோதே இதனை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/southasia/03/179743?ref=home-section

No comments:

Post a Comment