Sunday, May 27, 2018

யாழில் மாணவிகளிடம் 6 மாதமாக தவறாக நடந்து கொண்ட ஆசிரியர்: அம்பலமான உண்மை!


யாழ்பாணத்தில் பள்ளியில் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
யாழ்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் தொடர்ந்து 6 மாதமாக மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் தவறான நோக்கத்துடன் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இது குறித்து, குறித்த மாணவிகளின் பெற்றோர்கள் கொழும்பிலுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரில், பள்ளியில் வைத்து தொடர்ந்து 6 மாதமாக எங்களது பிள்ளைகளிடம் ஆசிரியர் தவறான நோக்கதுடன் தொந்தரவு செய்து வருகிறார். மாணவிகளை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் தினமும் ஆபாசமாக நடக்க முற்படுகிறார்.
மேலும், இதை யாரிடமும் கூறக் கூடாது எனவும், மீறினால், தங்களை பள்ளியிலிருந்து வெளியேற்றி விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால், நீண்ட காலத்திற்கு பிரகே இந்த விடயம் எங்களுக்கு தெரியவந்தது. இது குறித்து பள்ளி அதிபரிடம் புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் விடயத்தை மூடி மறைக்க முற்படுகின்றனர். என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து பொலிசார், விசாரணைகளை நடத்தி, 8 மாணவிகளிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். மேலும் குறித்த ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த விடயம் தொடர்பாக பள்ளியில், அதிபருக்கும், பெற்றோர்களுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

http://www.manithan.com/india/04/174010?ref=rightsidebar-jvpnews

No comments:

Post a Comment