கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் விஞ்ஞான பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவரிடம் சேட்டை புரிய முனைந்தார் என்று குற்றஞ்சாட்டி முறையிடப்பட்டுள்ளது.
அதனையடுத்துக் குறித்த ஆசிரியரை வெளிமாவட்டத்துக்கு இடம்மாற்றுமாறு மாகாணக் கல்வித் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. “முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த மாணவியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினோம்.
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
தாபநிதிக் கோவை அத்தியாயம் 2 விதி 48 அமைய ஒழுக்காற்று விசாரணையின்படி மாவட்டத்துக்கு வெளியே இடமாற்றம் செய்யுமாறு மாகாணக் கல்வித் திணைக்களத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளேன்” என்று கிளிநொச்சி வயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/04/174042?ref=ls_d_special
No comments:
Post a Comment