Sunday, May 27, 2018

10 ஆம் வகுப்பு மாணவனுடன் உறவு: பெற்றோர் அனுமதிக்காததால் ஆசிரியை செய்த செயல்!


இந்தியாவின் சண்டிகர் மாநிலம், ராம்தர்பார் என்ற பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு தனியார் டியூசன் நடத்தி வருபவர் 34 வயதாகும் ஆசிரியை உமா.
இவரிடம் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரும் அவருடைய தங்கையும் படித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு வகுப்பு படித்து வருவதால் இருவருக்கும் தனித்தனியே பாடம் எடுப்பதாக கூறி, வெவ்வேறு நேரத்தில் அவர்களை வீட்டுக்கு வர வைத்துள்ளார் உமா.
இந்நிலையில், தனிமையை பயன்படுத்தி, ஆசிரியை உமா, 10ஆம் வகுப்பு மாணவனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டுள்ளதோடு, மாணவன் தன்னிடம் பேசுவதற்காக அவருக்கு தனி சிம் கார்டு ஒன்றையும் வாங்கிக்கொடுத்துள்ளார்.
இந்த விடயம் மாணவனின் வீட்டுக்கு தெரியவர அவர்கள் வேறு ஒரு டியூசனுக்கு மாணவனை மாற்றியுள்ளார்கள்.
இதற்கிடையில், மாணவனுடன் அவனது பெற்றோரையும் உமா வீட்டிற்கு அழைத்து , இனிமேல் இப்படி நடக்காது என கூறி தொடர்ந்தும் தன்னிடம் மாணவனை அனுப்புமாறு கேட்டுள்ளார்.
மாணவனின் பெற்றோர் இதட்கு மறுப்பு தெரிவிக்க , மாணவனை தன்னுடன் அனுப்பவில்லை என்றால் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று கூறி, விஷ மருந்தை தன்னுடைய வாயில் ஊற்றி மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து ஆசிரியை உமாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

http://www.manithan.com/india/04/174000?ref=rightsidebar-manithan

No comments:

Post a Comment