Thursday, May 24, 2018

தூத்துக்குடி எரியும் நிலையில் கொண்டாட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள்: மக்கள் அதிர்ச்சி


தூத்துக்குடி கலவரபூமியாக மாறியுள்ள நிலையில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பூப்புனித நீராட்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் 12 பேர் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுவரை தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வந்து களநிலவரத்தை நேரில் பார்க்கவில்லை.
இந்நிலையில் சென்னையில் கட்சி நிர்வாகி மகளின் பூப்புனித நீராட்டு விழா கொண்டாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கலந்து கொண்டார்.
இதில் தமிழக அமைச்சர்களும் பங்கேற்றனர்.
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லாமல் பன்னீர்செல்வம் இப்படி செய்தது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

http://news.lankasri.com/india/03/179500?ref=recommended1

No comments:

Post a Comment