Wednesday, May 30, 2018

எப்படி தெரியும் என கேட்க வேண்டாம் எனக்கு தெரியும்: குழப்பத்தில் பதிலளித்த ரஜினிகாந்த் !

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினர்களுக்கு தலா 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு 10 ஆயிரமும் வழங்க ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார்.
அதன்பின்னர் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூகவிரோதிகளே காரணம் என தெரிவித்தார்.
மேலும் பொலிஸாரை அடித்ததே சம்பவத்திற்கு காரணம் எனவும் கூறினார்.
அப்போது கேள்வி எழுப்பிய செய்தியாளர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூகவிரோதிகள் காரணம் என எப்படி தெரியும் என கேட்டார்.
அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் எப்படி தெரியும் என கேட்க வேண்டாம் எனக்கு தெரியும் என குழப்பமாக பதிலளித்தார். மேலும் பேட்டி முழுவதும் சற்று ஆவேசமாக காணப்பட்டார்.

http://news.lankasri.com/india/03/180002?ref=ls_d_special

ரஜினியை பார்த்து சீறிய இளைஞர்! தீயாய் பரவும் காட்சி



துப்பாக்கிச் சூட்டில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவர் 'ஆமா நீங்க யாருங்க' என வெறுப்புடன் கேள்வி கேட்க ரஜினிகாந்த் சிரித்துக் கொண்டே முகம் வெளிறியபடி நகரும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.
தூத்துக்குடியில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கம் போல குளறுபடியான அறிக்கைகளையும் கருத்துகளையும் ரஜினிகாந்த் வெளியிட்டு வருவது சர்ச்சையாகி உள்ளது.
இந்த நிலையில் குறித்த காணொளி எமது இணையத்தளத்தில் பரவி வருகின்றது.

http://www.manithan.com/entertainment/04/174399?ref=rightsidebar-lankasrinews

ரஜினிகாந்தை தாக்கி பேசிய நடிகர் சித்தார்த்
இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்று போலீஸ் தப்பாக்கிசூடு மற்றும் தாக்குதலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். அப்போது ஒருவர் "நீங்க யாரு?" என கேட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
”போலீஸ் துப்பாக்கிசூடு நடத்த காரணம் முதலில் சமூக விரோதிகள் அவர்களை தாக்கி, கலெக்டர் அலுவலகத்தை தாக்கியது தான்” என ரஜினி பத்ரிகையாளர்களிடம் ஆவேசமாக பேசினார்.
மேலும் இப்போது சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு எதிராக பேசி வருகின்றனர். நடிகர் சித்தார்த் ரஜினியை ட்விட்டரில் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
"இவர்கள் அடுத்து என்ன சொல்வார்கள் தெரியுமா.. இத்தனை வருடமாக தூத்துக்குடியை மாசு படுத்தியது ஸ்டெர்லைட் இல்லை சமூக விரோதிகள் தான்" என சித்தார்த் தெரிவித்துள்ளார்.

http://www.cineulagam.com/actors/06/155094?ref=rightsidebar-lankasrinews

 ஆமா நீங்க யாரு? சூப்பர்ஸ்டாரை அதிரவைத்து ஒரே நாளில் ட்ரெண்ட் ஆன இளைஞன் - ஏன் கேட்டார் தெரியுமா?

ரஜினிகாந்த் இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் வீட்டிற்கு ஆறுதல் சொல்ல சென்றார். அதுமட்டுமின்றி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது ஒரு இளைஞரை சந்தித்து ரஜினிகாந்த் பேச, அவர் உணர்ச்சிப்பூர்வமாக ரஜினியிடம் பேசுகிறார், வீடியோவில் ‘நீங்கள் யார்?’ என்று கேட்பது போல் உள்ளது. இந்த வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகின்றது.
இதுமட்டுமன்றி அந்த இளைஞன் பெயர் சந்தோஷ்(முன்னணி வார இதழ் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளதில் நமக்கு கிடைத்த தகவல்), அவர் வேண்டுமென்று தான் ரஜினியிடம் அப்படி கேட்டாராம், தன் காலா படத்தை ஓட்டுவதற்கு தான் ரஜினி இப்படி செய்தார்.
ஸ்டெர்லைட் ஆலை மூடவில்லை என்றால் ரஜினி இங்கே வந்திருக்கவே மாட்டார், அவர் எங்களை தான் சமூக விரோதி என்று சொல்கிறாரா? என்று கோபமாக சந்தோஷ் பேசியுள்ளார்.
அதே நேரத்தில் அங்கிருந்த ஒரு சில மக்கள் நீங்கள் தான் அடுத்து முதலமைச்சர் ஆகவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.


http://www.cineulagam.com/actors/06/155084?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment