Thursday, April 26, 2018

மீண்டும் தாயகம் திரும்பும் ஈழ அகதிகள்


புலம்பெயர்ந்த நிலையில், தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வரும் ஒரு தொகுதி இலங்கை தமிழர்கள் நாளைய தினம் தாயகம் திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, 17 குடும்பங்களை சேர்ந்த 40 பேர் நாடு திரும்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் மீள்க்குடியேற்ற அமைச்சின் ஆகியவற்றின் நடவடிக்கையில் குறித்த நாடுதிரும்பல் பணிகள் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/community/01/180914?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment