Wednesday, April 25, 2018

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?


புண்ணிய காலங்களில் செய்யப்படும் தானங்களை சாதாரண காலங்களில் கிடைப்பதைவிட பன்மடங்கு புண்ணியம் உண்டு என்கின்றார்கள் சித்தர்கள்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள தானங்களின் பயன்களை நாமும் தெரிந்து கொள்ளுவோம்.
  • அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
  • வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
  • தங்கம் தானம் தர தோஷம் விலகும்
  • பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
  • தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
  • நெய் தானம் தர நோயைப் போக்கும்
  • பால் தானம் தர துக்கநிலை மாறும்
  • தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
  • நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
  • தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
  • தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
  • கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
  • பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
  • ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
  • அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

No comments:

Post a Comment