Wednesday, March 21, 2018

அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து!

கிரேக்க தீவு பகுதியில் 22 பேர் பயணித்த அகதிகளின் படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகியுள்ளதுடன் சிலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த படகில் பயணித்தவர்கள் புகலிடம் கோரி ஆபிரிக்க நாடுகளான லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவர்கள் என சர்வதேச தகவல்கள்தெரிவிக்கின்றன.
இதனையடுத்து தகவலறிந்த கிரேக்க மீட்பு பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதுவரையில் ஆபிரிக்க நாடுகளில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு வந்துள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரத்து 800க்கும்அதிகமானவர்கள் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment