பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.
இந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி, கடந்த 1997-ஆம் ஆண்டு கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.
அதன் பின் ரஜினி, கமல், ஆகியோருடன் நடித்து திரையுலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்தார். இந்நிலையில் துபாயிற்கு உறவினரின் திருமணத்திற்கு சென்ற போது மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது.
ஸ்ரீதேவியின் இளைய மகள் அவரோடு சென்றுள்ளார். மூத்த மகள் ஜான்வி தற்போது சினிமாவில் நடித்துவருவதால் அவர் ஸ்ரீதேவியோடு செல்லவில்லை.
ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய தகவல் அறிந்து பிரபலங்கள் பலர் தற்போது அவரது வீட்டுக்கு விரைந்துள்ளனர்.
http://news.lankasri.com/entertainment/03/172695?ref=imp-news
No comments:
Post a Comment