Friday, October 27, 2017

யாழில் நடந்த விபரீதம்! தாயும் 3 குழந்தைகளும் நஞ்சருந்தி தற்கொலை!


யாழ். அரியாலை AVவீதியில் தாய் ஒருவர், தனது 3 குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்து விட்டு தானும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் தாய் அவருடைய 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உட்பட நால்வரும் உயிரிழந்துள்ளனர்.
இவர்களது உடல்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


கடன் தொல்லை காரணமாக இவர்களது தந்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டதாகவும், தற்போது மனைவி உட்பட குழந்தைகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.
கடன் காரணமாக யாழில் ஒரு குடும்பமே பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் உயிரிழந்த 3 குழந்தைகளும் 5 வயதிற்கு உட்பட்ட சிறு குழந்தைகள் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.


தொடர்புடைய செய்தி -
யாழில் மரணிக்கும் முன் நீதிபதி இளஞ்செழியனுக்கு உருக்கமான கடிதம் எழுதிய 3 பிள்ளைகளின் தாய்

http://www.tamilwin.com/community/01/163124

No comments:

Post a Comment