Thursday, August 31, 2017

போர்க்குற்றம் தொடர்பான அரசாங்கத்தின் உண்மையான சுயரூபம் வெளிப்பட்டுள்ளது - சரத் வீரசேகர

போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவில் உள்ள தேசிய அமைப்புகள் பொது நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்களுக்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக சர்வதேசத்திற்கு பதிலளிக்க வேண்டும்.
எனினும் அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை. இதன் மூலம் அரசாங்கத்தின் உண்மையான சுயரூபம் தெரியவந்துள்ளதாகவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/politics/01/157000

No comments:

Post a Comment