Wednesday, August 23, 2017

யாழில் இளைஞன் மீது கொடூர தாக்குதல் மற்றும் வாள்வெட்டு

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், இளைஞர் ஒருவரை வெட்டி தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இளைஞன் மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உரும்பிராய் சந்தியிலுள்ள முடி வெட்டும் நிலையத்தில் பணியாற்றும் 24 வயதுடைய சுரேஸ்வரன் கனிஸ்டன் என்ற இளைஞரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த இந்த இளைஞனின் முதுகு பக்கத்தில் 10 தையல் போடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தாக்குதல் மேற்கொண்டது யார் என இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. இது குறித்து யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/security/01/156157

No comments:

Post a Comment