Thursday, August 24, 2017

அமரர் தம்பையா தர்மலிங்கம் 5ம் ஆண்டு நினைவஞ்சலி!!

மண்ணில் : 4 யூலை 1938 — விண்ணில் : 18 செப்ரெம்பர் 2012

திதி : 24 ஓகஸ்ட் 2017

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா தர்மலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயா ஐயா ஒவ்வொரு ஆண்டும் விரல் நுனியில்
பயணிக்கின்றது ஐயா ஐயா!
ஐயா ஐயா உங்களுடன் பயணித்த காலம்
பசுமையாக மனதில் ஊஞ்சல் ஆடுகின்றது ஐயா ஐயா!

ஐயா ஐயா எங்கோ ஒரு மூலையில்
உங்கள் அலைபேசியின் மணி ஒலி
ஓசை கேட்கின்றது ஐயா ஐயா!
ஐயா ஐயா ஈருடல் ஒன்றாகி
எங்கள் தாயின் முகத்தில உங்களைக் கண்டு
காலங்கள் கரைகின்றது ஐயா ஐயா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
முருகண்டிப் பிள்ளையாரை வேண்டி
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்.
தகவல்
ராதிகா மாறன்
தொடர்புகளுக்கு
ரஞ்சி — நெதர்லாந்து
தொலைபேசி:+31687656487
http://www.kallarai.com/ta/remembrance-20170823103838.html

No comments:

Post a Comment