Tuesday, August 22, 2017

இளம்பெண்களை குறிவைக்கும் மர்ம நபர்: தகவல் கொடுத்தால் 10,000 பவுண்ட் பரிசு

பிரித்தானிய நாட்டில் இளம்பெண்களை குறிவைத்து பாலியல் தாக்குதல் நடத்தி வரும் நபர் குறித்து தகவல் கொடுத்தால் 10,000 பவுண்ட் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு பொலிசார் அறிவித்துள்ளனர்.
பிரித்தானிய தலைநகரான லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டில் மர்ம நபர் ஒருவர் இளம்பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து கடந்தாண்டில் மட்டும் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளனர்.
மூன்றாவதாக பெண் ஒருவரை கற்பழிக்க முயன்றபோது அவர் தனது கார் சாவியால் தாக்குதல் நடத்திய நபரின் முகத்தில் கீறிவிட்டு தப்பியுள்ளார்.
இந்த மூன்று தாக்குதல்களிலும் ஒரே நபர் ஈடுப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், கண்காணிப்பு கமெராவில் பதிவான தாக்குதல்தாரியின் புகைப்படத்தையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திய நபர் ஆசியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மர்ம நபரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிசார் இவரை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு 10,000 பவுண்ட் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
http://news.lankasri.com/uk/03/131197

No comments:

Post a Comment