36,515
Views
இந்தியாவின் , பெங்களூரில் நைஜீரிய நாட்டுப் பெண்கள் சிலர் பஸ்ஸொன்றின் சாரதி மற்றும் நட த்துனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் மாநகர பஸ்ஸில் ஏறிய நைஜீரியாவைச் சேர்ந்த 6 மாணவிகள் நடத்துனர் மற்றும் சாரதியை மோசமாக தாக்கியுள்ளனர்.
பஸ் டிக்கெட்டை எடுக்கும்படி நட த்துனர் கேட்டுள்ளார். இதன்பின்னரே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு மாணவி நடத்துனரின் கழுத்தைப் பிடித்து அவரை ஆசனத்தில் சாய்க்க, மற்றொரு மாணவி தனது காலணியாலும் அவரை அடித்துள்ளார்.
இந்த சம்பவத்தை பஸ்ஸில் இருந்த பயணி ஒருவர் தனது கையடக்கத்தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் பஸ் சாரதி பஸ்ஸை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அவரும், நட த்தினரும் அளித்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் அந்த 6 மாணவிகளையும் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவத்தால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் நகரமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.
No comments:
Post a Comment