Monday, June 1, 2015

காலை 7.15க்கு புறப்பட்ட வித்தியா..! எம்மிடம் உள்ள தவறுகள் என்ன...?



சரணியா எனும் மாணவி மீது நடந்த கொடுமைக்கு எதிராக நாம் அன்று போராடி இருந்தால் வித்தியாவிற்கு இப்படி அநீதி இடம்பெற்றிருக்க வாய்ப்புக்கள் இல்லை என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதி அரியரெட்ணம்.
யாழ்.மக்கள் அனைவரும் தற்போது ஒரு குழப்பமான சூழ்நிலையிலே உள்ளனர்.
விரைவில் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை கண்டுபிடிக்காவிட்டால். இது தொடர்ச்சியாக முழு மாணவர்களின் கல்வியையும் பாதிப்பதற்கும், பாரம்பரியம் மிக்க ஒரு சமுதாயம் விரைவில் அழிந்துவிடக் கூடிய நிலையை உருவாக்கும் என்றார்.
லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment