Wednesday, March 18, 2015

ஹெட்போன் அணிந்து பாட்டு கேட்கும் புத்தர்: தீயாய் பரவும் புகைப்படம் (வீடியோ இணைப்பு)

ஹெட்போன் அணிந்து கொண்டு புத்தர் பாட்டு கேட்பது போன்ற புகைப்படம் வெளியிட்ட நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டின் யங்கூன்(Yangon) நகரை சேர்ந்த பிலிப்ஸ் பிளாக்வுட்(Philip Blackwood Age-32) என்ற நபர் இரவு விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இவர் தனது இரவு விடுதி விளம்பரத்திற்காக கடந்த டிசம்பர் மாதம், புத்தர் தன் காதில் ஹெட்போன்(Headfone) அணிந்து இருப்பது போல் ஒரு போஸ்டரை வடிவமைத்து பேஸ்புக்கில் வெளியிட்டார்.
இந்த போஸ்டருக்கு மியான்மரில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இது புத்தரையும், புத்த மதத்தையும் அவமதிப்பது போல் உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இதை தொடர்ந்து மியான்மர் அரசு அந்த இரவு விடுதியை மூட உத்தரவிட்டது. மேலும் விடுதியின் உரிமையாளர் மற்றும் பிளாக்வுட் மற்றும் 2 பணியாளர்களையும் கைது செய்த பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, நியூசிலாந்தை சேர்ந்த பிளாக்வுட்டுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மியான்மரை சேர்ந்த 2 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment