Wednesday, December 31, 2014

தாய், தங்கையை நிர்வாணப்படுத்தி சித்ரவதை! படுகொலை செய்த கொடூரம்!

மராட்டிய மாநிலத்தில் பேய் இருப்பதாக கூறி தாய் மற்றும் தங்கையை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் நாசிக் அருகே உள்ள கோதி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பூதாபாய் டோர் (வயது 65).
இவருக்கு கோவிந்த் போனா டோர், காசி நாத் என்ற இரு மகன்களும்,ராகிபாய் பிங்கிள் என்ற மகளும் உள்ளனர்.
சகோதரர்கள் இருவர் சேர்ந்து அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த மந்திரவாதி பாஜ்ஜி பாய் நாராயண் காட்கி என்பவரை சந்தித்துள்ளனர்.
அவரிடம் தங்களுக்கு கெட்ட நேரம் உள்ளதாகவும், அதை போக்க ஏதாவது வழி இருக்கிறதா என்றும் கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த மந்திரவாதி, உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களிடம் பேய் இருக்கிறது, எனவே தான் எந்தவித முன்னேற்றமும் உங்கள் வாழ்வில் இல்லை என கூறியுள்ளார்.
உடனே அவர்களது தாய், சகோதரி மற்றும் பாசிபாய் வீர் என்ற பெண்ணையும் அழைத்துக் கொண்டு மந்திரவாதியின் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, இரும்பு தடை மற்றும் கம்புகளால் தாக்கியதுடன் ஆடைகளை அகற்றி சித்ரவதை செய்துள்ளனர்.
இப்படியே சில நாட்கள் கழிந்த நிலையில், மந்திரவாதி ஒருநாள் தாயாரின் கண்களை பிடுங்கி விட்டு அவரை கொலை செய்து புதைத்துவிடுமாறு கூறி உள்ளான்.
இதையும் சகோதரர்கள் செய்து உள்ளனர்.தொடரந்து அடிதாங்க முடியாமல் பாசிபாய் வீரும் பலியானார்.
அங்கிருந்து சகோதரர்களின் தங்கை பிங்கிள் மட்டும் தப்பி வந்து, உள்ளூர் சமூக ஆர்வலர் பகவான் மாதே என்பவரின் துணையுடன் பொலிசில் புகார் செய்து உள்ளார்.
விரைந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் சகோதரர்கள் , மந்திரவாதி, மந்திரவாதியின் உதவியாளர்கள் என 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

No comments:

Post a Comment