Friday, November 7, 2014

வாரியபொல யுவதியின் முறைப்பாட்டை அடுத்து மற்றுமொரு இளைஞன் கைது



குருநாகல் வாரியபொலயில் இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி, நேற்று செய்த முறைப்பாட்டுக்கு இணங்க மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17வயதான இளைஞரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தமது பிடித்து இழுக்கமுயன்றார் என்ற குற்றச்சாட்டையே யுவதி, இளைஞர் மீது சுமத்தியுள்ளார்.
திலினி இமெல்கா என்ற இந்த யுவதி, ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமது ஆடைகளை காட்டி இழிவுப்படுத்தினார் என்ற குற்றம் சுமத்தி இளைஞர் ஒருவரை தாக்கினார்.
இதன்பின்னர் அந்த இளைஞர் கைது செய்யப்பட்ட அதேநேரம் திலினியும் இளைஞர் அளித்த முறைப்பாட்டுக்கு இணங்க கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, தாம் கைது செய்யப்பட்டதை ஆட்சேபித்து திலினி நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தார்.
இந்தநிலையிலேயே நேற்றைய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

http://www.tamilwin.com/show-RUmszBTbKXgx6.html

No comments:

Post a Comment