Saturday, November 1, 2014

பெறா மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை கைது!

16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகளால் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து லிந்துலை கூமூட் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் சித்தப்பா முறையானவராவர்.
லிந்துலை கூமூட் பகுதியை சேர்ந்த குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்புரிவதாகவும் தந்தை வியாபாரியாக செயற்படுவதாகவும் இதனால் சிறுமி தனது சித்தப்பா வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேற்படி சிறுமி தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதாக பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேற்படி சிறுமி பொலிஸாரின் உத்திரவின் படி தனது சித்தியோடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை, இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjs7.html

No comments:

Post a Comment