குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரோலி பகுதியை சேர்ந்த மந்திரவாதி "மாமா சவுகான்", தனது இரு மனைவிகள் உதவியுடன் 23 வயது இளம்பெண் ஒருவரை கற்பழித்துள்ளான். ஆசிரியையாக பணியாற்றும் அந்த இளம்பெண்ணின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போய் விட்டார். அவரை அப்பெண் தேடி வரும் வேளையில் மந்திரிவாதி மாமா சவுகானிடம் சென்றால் தந்தை இருப்பிடம் பற்றி அறியலாம் என சிலர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாமா சவுகானிடம் சென்ற அப்பெண் தனது தந்தை பற்றி கூறியிருக்கிறார். இதற்கு மந்திரவாதி தன்னிடம் அதி தீவிர சக்தி உள்ளது என்றும், அதைக்கொண்டு அப்பெண்ணின் தந்தையை கண்டுபிடித்து தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு தான் சொல்வதை கேட்டு அப்பெண் நடக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்த மந்திரவாதி தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூற அவரது இரு மனைவிகளும் அவரது ஆசைக்கு இணங்குமாறு அப்பெண்ணை வற்புறுத்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட நான்கு நாட்கள் அப்பெண்ணை அடைத்து வைத்த மந்திரவாதி அவரை மீண்டும் மீண்டும் கற்பழித்துள்ளான். இதற்கு அவனது மனைவிகள் உடந்தையாக இருந்ததுடன் இதைப் பற்றி வெளியில் சொன்னாலோ, போலீசில் சொன்னாலோ அப்பெண்ணை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பித்த அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர் கற்பழிக்கப்பட்டது உறுதியானதால் காவல்துறையினர் "மாமா"வையும் அவரது இரு மனைவிகளையும் கைது செய்தனர். |
No comments:
Post a Comment