Wednesday, October 1, 2014

நடிகர் விஜயை நிம்மதியாக நித்திரைகொள்ள அவரது மூட ரசிகர்கள் விடமாட்டார்கள் !

நடிகர் விஜய்யை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போல, அவரது ரசிகர்கள். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிய ரசிகர்களால் நடிகர் விஜய் பெரும் அப்செட்டுக்குள்ளானார். இந்த நிலையில் விஜய்யின் படத்தைப் போட்டு மேலும் ஒரு பரபரப்புப் போஸ்டரை ஒட்டி அவரை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளனர். சொத்துக் குவிப்புவழக்கில் ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவுக்கு நன்றி தெரிவித்து, புதிய போஸ்டர் விஜய் படத்துடன் வெளியாகியுள்ளது.

தமிழ் நாடே பத்தி எரியும் இந்தவேளையில் விஜயின் ரசிகர்கள் என்ற போர்வையில் சில விஷமிகள் இப்படிச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment