Friday, August 1, 2014

நகரமே பற்றி எரியும்போது பாட்டில் பியர் அடித்த பெண் !


பிரித்தானியாவின் ஈஸ்ட்போர்ன் மாகாணத்தின் கடற்கரையில் இருந்து கடலின் உள்ளே செல்லும் 140ஆண்டு பழமைவாய்ந்த பாலம் ஒன்றின் மேல் உள்ள கட்டிடம் தீ பற்றி எரிந்தது,
அப்போது பிரித்தானியாவின் ஈஸ்ட்போர்ன் மாகாணத்தின் கடற்கரையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அரைகுறை ஆடை அணிந்து கொண்டு,140ஆண்டு பழமைவாய்ந்த பாலம் ஒன்றின் மேல் உள்ள கட்டிடம் ஒன்று தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது எதைப் பற்றியும் கவலைப் படாதவராக, கடற்கரையில் இருந்து கொண்டு,தீப் பற்றி எரியும்போது,அதற்கு முன்புறம் அவர் அமர்ந்து கொண்டு,புகைப் படமாக எடுத்துள்ள சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,மேலும் அவர் மதுபானத்தை வைத்துக் கொண்டும் அப்புகைப்படத்தை எடுத்துள்ளார்.
இப்புகைப்படம் அனைத்தையும் சமூக வலைதள புகைப் பட இணையதளங்களில் அனைவரும் பார்க்கும்படி உலவ விட்டுள்ளார்,இவர் செய்த செயல் போதாதென்று,இவரைப் போலவே மேலும் ஒருவர்,கட்டிடம் தீ பற்றி எரியும் போது அதற்கு முன்னால் நின்று கொண்டு புகைப்படமாக எடுத்து அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் அனைவரது மனதிலும் அதிர்ச்சியையும்,ஆதங்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பிரித்தானியாவின் ஈஸ்ட்போர்ன் மாகாணத்தின் பழமைவாய்ந்த பாலம் ஒன்றின் மேல் உள்ள அக் கட்டிடம் மிகவும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் அக் கட்டிடம் மீண்டும் பழைய நிலையில் இருப்பதற்காக சரி செய்யப்படும் அல்லது இடித்து தள்ளப் படும் என அக் கட்டிடத்தை ஆராய்ந்த வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment