Friday, August 1, 2014

கைகளை கடித்து துண்டாடிய சிறுத்தை: 11 வயதுச் சிறுவன் கூண்டுக்குள் கைகளை விட ..

பிரேசிலில் உள்ள காஸ்கவேல் மாகாணத்தில் உள்ள மிருகக்காட்சி அருங்காட்சியகத்தில் உள்ள புலி ஒன்று 11 வயது சிறுவனின் கைகளை கடித்து துண்டாடிய சம்பவம் பிரேசிலில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. பிரேசிலில் உள்ள காஸ்காவேல் மாகாணத்தில் உள்ள மிருகக்காட்சி அருங்காட்சியகம் ஒன்றை பார்வையிட 11வயது சிறுவன்,அவனது தந்தை மற்றும் சகோதரர் உடன் சென்றுள்ளார்,

மிருகக்காட்சி அருங்காட்சியகம் சென்ற 11வயது சிறுவன் அங்குள்ள புலிகள் இருக்கும் பகுதிக்கு சென்று அதனை பார்வையிட சென்ற போது தான் அச்சிறுவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மேலும் அச்சிறுவன் புலி உள்ளே இருக்கும் கூண்டின் வெளிப்புறம் நின்று கொண்டு, தனது கைகள் இரண்டையும் உள்ளே நீட்டி உள்ளான், அப்போது புலி இவனது கைகள் இரண்டையும் கடித்து துண்டாடி உள்ளது. அச்சிறுவன் மிருகக்காட்சி அருங்காட்சியகத்தின் தடை செய்யப் பட்ட பகுதிக்குச் சென்று,புலியிடம் விளையாட்டாகச் செய்த வினை,இறுதியில் விபரீதத்தில் முடிந்துள்ளது,
இவ்வாறு அச்சிறுவன் புலியிடம் விளையாடுவதற்கு,அவனது தந்தையும் அனுமதி அளித்ததுதான் பெரும் வேடிக்கையாக உள்ளது. மேலும் அச்சிறுவனின் கைகளை புலி கடித்துக் கொண்டிருக்கும் போது, அச்சிறுவனின் 3 வயது தம்பி அவனைக் காப்பாற்றி உள்ளான். அச்சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டு,அவசர ஊர்தி மூலம் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டு,மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளான்.

No comments:

Post a Comment