Sunday, July 29, 2018

யாழில் இரவு நேரத்தில் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் மர்ம கும்பல்! தலைதெறிக்க ஓடிய இளைஞர்கள் வெளியில் வர அச்சப்படும் மக்கள்!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் வாள்களுடன் திரியும் மர்ம குழுவினர், வீதியால் செல்வோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாக தெரிய வந்துள்ளது.
நேற்றிரவு சண்டிலிப்பாயில் வாள்களுடன் நின்ற கும்பல் ஒன்று பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் குழுவினர் வீதியில் போவோர் வருவோரை மடக்கி பிடித்து மிரட்டியதுடன், அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் பறித்துக் கொண்டது.
‘‘உயிர் வேண்டுமா, பைக் வேண்டுமா’’ கேட்டு வாளைக் காட்டி மிரட்டியதை அடுத்து மோட்டார் சைக்கிளைக் கொடுத்து விட்டு சில இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சண்டிலிப்பாய் இரட்டையபுரம் வைரவர் கோவிலை அண்டிய பகுதி, ஆலங்குளாய், கல்வளை, சண்டிலிப்பாய் வடக்கு போன்ற இடங்களில் நேற்றிரவு இந்த அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளது.
முகத்தை மூடித் துணியால் மறைத்தவாறு 8 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10க்கும் மேற்பட்டவர்களே இவ்வாறு அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர்.
தையல் கடைக்குள் நின்ற இளைஞனை மிரட்டியே மோட்டார் சைக்கிளில் பறிக்கப்பட்டது. வீதியால் சென்றவர்கள் வாள்களுடன் நடமாடியவர்களைக் கண்டு, வாகனங்ளை விட்டுவிட்டுச் சிதறி ஓடியுள்ளனர். அவர்கள் தப்பித்தாலும், வாகனங்கள் வாள்வெட்டுக்கு இலக்காகின. சிறிது நேரம் அங்கு தரித்து நின்ற வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்து சென்றது.
யாழ். குடாநாட்டில் ஆவா குழுவின் அட்டகாசம் தீவிரமடைந்துள்ள நிலையில், இவ்வாறான அச்சுத்தல் சம்பவங்களால் மக்கள் பெரிதும் அச்சப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://www.tamilwin.com/community/01/189261?ref=recommended2

No comments:

Post a Comment