Tuesday, June 5, 2018

ஆட்கடத்தலில் ஈடுபட்ட 6 இலங்கையர்கள் இத்தாலியில் கைது

சட்டவிரோத குடியேறிகளை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 6 இலங்கையர்கள்இத்தாலியின் சிசிலியில் கைது செய்யப்பட்டுள்ளதாக இத்தாலி ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
முன்னதாக சட்டவிரோத குடியேறிகளின் கடத்தல் தொடர்பில் இரண்டு இலங்கையர்கள்கைது செய்யப்பட்டனர்
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே ஏனைய நால்வரும்கைது செய்யப்பட்டதாக இத்தாலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் அவர்கள் எப்போது கைது செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பில் தகவல்கள்வெளியாகவில்லை.
அவர்கள் இலங்கையில் இருந்து இத்தாலிக்கு ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/community/01/184583?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment