Sunday, June 10, 2018

யாழில் இரு குழுக்களிடையே கடும் மோதல் - 24 பேர் வைத்தியசாலையில் அனுமதி


யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட பாரிய மோதல் காரணமாக 24 பேர் காயமடைந்துள்ளனர்.
வல்வெட்டிதுறை, நெடியகாடு பிரதேசத்தில் அமைந்துள்ள மைதானத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதல் காரணமாக காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டிதுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெடின்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த மைதானத்தில் தினமும் மாலை கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன
நேற்றிரவு இரு குழுக்களுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் இளைஞர் மீது மற்றுமொரு இளைஞர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதனால் அங்கிருந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் மோதி கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நீண்ட தூரம் சென்றமையினால் மைதானத்தில் இருந்த மட்டைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த 21 இளைஞர்கள் யாழ், ஊரனி வைத்தியசாலையிலும், ஏனைய 3 பேர் பருத்தித்துறை, மந்திகை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

http://www.tamilwin.com/security/01/185083?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment