Tuesday, May 1, 2018

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழ் இளைஞன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

புத்தளத்தில் எரிந்த நிலையில் தமிழ் வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் - உடப்புவ - கிரியன்கள்ளி பிரதேசத்தின் பாழடைந்த இடத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
34 வயதான பெரியவெள்ளையன் ஆறுமுகம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து வந்து அந்தப் பகுதியில் மோட்டார் வாகனத்திற்கான மேலதிக பாகங்கள் விற்பனை செய்யும் வர்த்த நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
அவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எப்படியிருப்பினும் நேற்று கிடைத்த தகவல்களுக்கமைய இந்த நபரின் சடலம் கிரியன்கள்ளி பிரதேசத்தில் உள்ள பாழடைந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரது சடலத்திற்கு அருகில் பணப்பை ஒன்றும் கிடைத்துள்ள நிலையில் அதில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடன் செலுத்துவது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக தான் மன வருத்தத்தில் இருப்பதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக அவரது வீட்டில் அதேபோன்று இன்னுமொரு கடிதம் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


http://www.tamilwin.com/community/01/181431?ref=home-top-trending

No comments:

Post a Comment