கென்யாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலப்பிளவு காரணமாக, ஆபிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிளவுபட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
சமீபத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தில், மிகப்பெரிய நிலப்பிளவு ஏற்பட்டது. இந்தப் பிளவின் காரணமாக கென்யாவில் உள்ள நைரோபி – நரோக் நெடுஞ்சாலை முழுவதும் சேதமடைந்ததோடு, அந்தப் பகுதியில் நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
வடக்கே ஏடன் வளைகூடா தொடங்கி தெற்கே சிம்பாப்வே வரை சுமார் 3 ஆயிரம் கிலோமீற்றர் நீளத்துக்கு இந்தப் பிளவு ஏற்பட்டுள்ளது.
பிளவு அதிகரித்துச் செல்லும் என்பதால் ஆபிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிரிவுபட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள்.
இந்தப் பிளவின் காரணமாக எத்தியோப்பியா, ருவாண்டா, தன்சானியா, சாம்பியா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் தனிக் கண்டமாக பிரிய வாய்ப்பு இருப்பதாக கூறிய விஞ்ஞானிகள், இத்தகைய மாற்றங்கள் ஏற்பட இன்னும் பல ஆயிரம் ஆகும் எனவும் தெரிவித்தனர்.
http://www.canadamirror.com/world/04/167774
No comments:
Post a Comment