Wednesday, March 21, 2018

பூண்டை இப்படி சாப்பிடுங்கள்! சர்க்கரை நோய் நெருங்குவதற்கு அஞ்சி நடுங்கும்


பூண்டு பல்வேறு மருத்துவ குணம் கொண்ட உணவு பொருள் ஆகும். தினமும் பூண்டை உணவில் எடுத்து கொள்ளுவதனால் ஆரோக்கியத்தை அள்ளி தருகின்றது.
பூண்டின் மருத்து குணங்களை எப்படி பயன்படுத்தினால், இன்னும் அதிகமான பலன்களை பெறலாம் என்பதை பார்க்கலாம்.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
ஒரு டம்ளர் பாலுக்கு 10 பூண்டு பல்லை சேர்த்து, பாலில் சிறிது நேரம் பூண்டை வேகவைத்து, சாப்பிட வேண்டும்.
பூண்டின் மருத்துவ குணம் பாலில் இறங்கியதும், அந்த பால் கசக்கும். அதனால் பாலில் உள்ள பூண்டுகளை தனியே எடுத்து சாப்பிடலாம் அல்லது பாலுடன் சேர்த்து குடிப்பது நல்லது.
பூண்டு சேர்த்த பாலில் இனிப்பு சுவைக்காக சிறிதளவு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பனங்கற்கண்டு தரமானதாக இருப்பது அவசியம்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய பனை வெல்லத்தை பூண்டு பாலில் சேர்த்து குடிக்கலாம்.
பூண்டு வேகவைத்த பாலை தினமும் இரவில் குடித்து வந்தால், ரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமாகும்.

http://www.manithan.com/health/04/165895?ref=ls_d_manithan


No comments:

Post a Comment