தோற்றம் : 20 டிசெம்பர் 1935 — மறைவு : 21 மார்ச் 2018
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கடம்பேஸ்வரன் அவர்கள் 21-03-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நடராஜா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கடம்பேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி(கனடா), தயாநிதி, தனரஞ்சினி(லண்டன்), தயாபரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புஷ்பராஜன்(கனடா), காலஞ்சென்ற சிவகுமார், மனோகரன்(லண்டன்), சாருலதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகேஸ்வரன், சண்முகநாதன், பாலசுப்பிரமணியம், கனகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லக்ஷ்மன், காலஞ்சென்ற சுஜீவன், இஷிகா, டமேஷா, பானுஷா, ஹரிஷ், அக்ஷயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் மஹிந்தமலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 01:30 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment