குடும்பத்தை எதிர்த்து காதலியை திருமணம் செய்த இளைஞர் மனைவிக்கு வந்துள்ள இதய நோயை காரணம் காட்டி அவரை வீட்டை விட்டு துரத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, பாவ்னா என்ற இளம் பெண்ணுக்கு தாய் தந்தை இல்லாத நிலையில் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார்.
கடந்தாண்டு தனது உறவினர் வீட்டுக்கு பாவ்னா வந்த போது அந்த பகுதியில் வசிக்கும் ஆதர்ஷ் என்ற இளைஞருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதை மீறி பாவ்னாவை ஆதர்ஷ் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஆதர்ஷ் வீட்டில் சமாதானமாகி அவர்களை ஏற்று கொண்டனர்
தம்பதியின் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் பாவ்னாவுக்கு உடல்நல கோளாறு ஏற்பட்ட நிலையில் அவருக்கு இதய நோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
ஒரு கட்டத்தில் மனைவியையும், குழந்தையையும் ஆதர்ஷ் வீட்டை விட்டு இரக்கமின்றி துரத்தியுள்ளார். தற்போது உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் பாவ்னா மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாதததுடன், குழந்தைக்கு உணவு வாங்க கூட பணமில்லாமல் தவித்து வருகிறார்.
கணவர் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது குறித்து பாவ்னா பொலிசில் புகார் அளித்துள்ள நிலையிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
http://www.manithan.com/india/04/154539?ref=ls_ma_d
No comments:
Post a Comment