வெளிநாடொன்றிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தனது மகளைப் பார்வையிடுவதற்காக வருகை தந்த தாயாரொருவர் இன்றைய தினம் திடீரென மரணமாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். பருத்தித்துறை, வத்தனை, புலோலி மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட குறித்த பெண்மணி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகப் புலம்பெயர்ந்து சென்று ஜேர்மனி நாட்டின் வாறண்டோர்வ் நகரில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் யாழ். பருத்தித்துறையிலுள்ள தனது மகளின் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
குறித்த பெண் வழமை போன்று தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் சந்தோசமாகப் பொழுதைக் கழித்துள்ளார். மதியம் திடீரெனத் தனது நெஞ்சுக்குள் ஏதோ செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் வீட்டிற்கு வெளியே நடந்து சென்ற குறித்த பெண்மணி சில நிமிடங்களில் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார். தனது மகளை நோக்கி மதிய உணவைத் தயார் செய்யுமாறு கூறியுள்ளார்.
சில நிமிடங்களில் விக்கல் ஏற்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
அதேயிடத்தைச் சேர்ந்த பரஞ்சோதி பாக்கியம் (வயது-75) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவர் இன்னும் சில தினங்களில் மீண்டும் வெளிநாடு செல்வதற்குத் தயாராகவிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/community/01/163950
No comments:
Post a Comment