Saturday, November 18, 2017

பதை.. பதைக்கும் இந்தப் போராளியின் துயர நிலை!! தெரிகிறதா இந்தத் தமிழனை??

தன்னுடைய குடும்பத்திற்காகவோ இல்லை தன் உறவுகளின் உல்லாச வாழ்க்கை வேண்டியோ போராடவில்லை போராளிகள் வாழ வேண்டிய வயதில் ஆசா பாசங்களை இழந்து படிப்பை இழந்து ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் விடியலுக்காகவும் தன் தமிழ் இன தேசத்தின் விடுதலை வேண்டியும் ஆயுதம் ஏந்தி போராடிய தமிழர்களின் காவல் தெய்வமாக பார்க்க வேண்டிய போராளிகள் இன்றைய நிலை பாருங்கள்.

தமக்காகவா இல்லை இந்த நன்றி கெட்ட இனத்திற்காகவா போராடியதை நினைத்து மனம் வெந்து நடு வீதியில் கையேந்தி நிற்கின்றிர்கள்...

வெளிநாடுகளில் நா கிழிய தேசியம் பேசி அண்ண இன்று வருவார்...
இல்லை... இல்லை... நாளை வருவார் என வீரம் நிறைந்த போராட்டத்தையும் மாவீரரையும் போற்றி பணம் பெற்று என்ன நடக்கிறது... எங்களை தெரியவில்லையா என ஆதங்கப் படும் இவர்களின் உள்ளக் குமுறல் புரிகிறதா.

உள்ளூர் தனவான்களே வெளியூர் வெள்ளை கார தமிழர்களே இவர்கள் பழி உங்களை அழிக்க வேண்டும். உயிரோடு உள்ள மகா வீரர்களை புறக்கணித்து உயிரிழந்த மாவீரர்களை ஒவ்வொரு வருடமும் போற்றி வணங்கி போலி வேசம் போடுகின்றோம் நான்/நாம் உட்பட.... அனைவரும்..







http://www.jvpnews.com/srilanka/04/150347

No comments:

Post a Comment