பசியின் கொடுமையினால் குப்பை தொட்டியில் கிடந்த பழுதடைந்த பப்பாசி பழத்தை சாப்பிடும் சிறுவனின் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.
இலங்கையில் எந்தப் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதென தகவல்கள் ஒன்றும் வெளியாகவில்லை.
பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படம் பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது.
இந்த காட்சியை புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பதிவிட தெரிந்தவர்களுக்கு, அந்த சிறுவனுக்கு உணவு பெற்றுக் கொடுக்க தெரியவில்லை என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த சிறுவனை அடையாளம் காண முடிந்தால், முடியுமான உதவிகளை பெற்று கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment