மண்ணில் : 17 நவம்பர் 1947 — விண்ணில் : 5 செப்ரெம்பர் 2017
யாழ். தாவடி கிழக்கு நந்தாவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் செல்வநாயகம் அவர்கள் 05-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் தங்கம்மா தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஜினி(வலி தெற்கு பிரதேச சபை- சுன்னாகம்), சந்திரகாசன்(பிரான்ஸ்), சுதர்ஜினி(தாவடி), தர்ஜினி(லண்டன்), பகீரதன்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருணகிரிநாதன், யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ராஜரத்தினம், கணேசரத்தினம், கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காங்கேயன், ஜெகன்(லலிதா புடவையகம்- யாழ்ப்பாணம்), சதீஸ்குமார்(லண்டன்), சயிந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோகுல், ஹரிணி, ஷாகின், விதுலாஷினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று மதியம் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
http://www.kallarai.com/ta/obituary-20170905216328.html
No comments:
Post a Comment