பிறப்பு : 15 மே 1973 — இறப்பு : 25 ஓகஸ்ட் 2017
யாழ். நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்மலானை, லண்டன் Walthamstow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேஷரட்ணம் நரேஷ்குமார் அவர்கள் 25-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கணேஷரட்ணம்(ஓய்வுநிலை உத்தியோகத்தர்- இலங்கைக் கடதாசி ஆலைக் கூட்டுத் தாபனம், வாழைச்சேனை) காலஞ்சென்ற சரோஜினிதேவி(ஆசிரியை) தம்பதிகளின் இளைய மகனும், இளையதம்பி நாகேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
கேதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தரணியா, ஹனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேஷ்குமார்(அவுஸ்திரேலியா), நந்தினி(இரத்மலானை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மராஜா(பிரான்ஸ்), சிவஜா(அவுஸ்திரேலியா), சுதாஜினி, சுமித்தா, Dr. கிருபாலர், பேரருள், Dr. கஜன், பொன்னம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஞ்ஜீவன், நிமலராஜன், ஜெயசீலன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
http://www.kallarai.com/ta/obituary-20170826216288.html
No comments:
Post a Comment