(இளைப்பாறிய தொழிற்நுட்ப அத்தியட்சகர்)
அன்னை மடியில் : 26 பெப்ரவரி 1937 — ஆண்டவன் அடியில் : 24 யூலை 2017
யாழ். உடுப்பிட்டி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கைதடி மணியகாரவளவு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், டென்மார்க், நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சண்முகசுந்தரலிங்கம் அவர்கள் 24-07-2017 திங்கட்கிழமை அன்று நெதர்லாந்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
கெளசலா(Milton Keynes, பிரித்தானியா) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தாமோதரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகநாதன்(Milton Keynes, பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விமலாதேவி பாலசுப்பிரமணியம், தெய்வநாயகி முத்துக்குமாரசுவாமி, மற்றும் யோகேஸ்வரி பேரின்பநாயகம்(ஐக்கிய அமெரிக்கா), மயில்வாகனம் சிவயோகசுந்தரம்(ஐக்கிய அமெரிக்கா), மயில்வாகனம் யோகவிநாயகம்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிராமி(பிரித்தானியா), காயத்திரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
No comments:
Post a Comment