பிறப்பு : 18 சனவரி 1964 — இறப்பு : 25 ஏப்ரல் 2017
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Beverwijk ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் சிவகுமார் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மங்கையற்கரசி(அத்தை) அவர்களின் பாசத்திற்குரிய மருமகனும், முருகேசு மங்கையற்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,
நிதுர்ஷா, விதுர்ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார், கிருஸ்ணகுமார், காலஞ்சென்ற சாந்தகுமார், மாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 28-04-2017 வெள்ளிக்கிழமை முதல் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை வரை Uitvaartverzorging IJmond Funeral Home, Laan van Assumburg 95-A, 1962 TL Heemskerk, Netherland எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment