பிறப்பு : 13 நவம்பர் 1960 — இறப்பு : 13 சனவரி 2017
யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குணரட்னம் அவர்கள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று சாவகச்சேரியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசமூர்த்தி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்தனா(சுவிஸ்), கீர்த்திகன்(சுவிஸ்), கீர்த்திகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவலோகநாயகி, மனோன்மணி(இலங்கை), குணபாலசிங்கம்(இலங்கை), ராமலிங்கம்(ராசா- சுவிஸ்), தனபாலசிங்கம்(கிளி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாரூபன்(சுவிஸ்), கீர்த்திகா(சுவிஸ்), அபிர்த்தனன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காஞ்சென்ற சச்சிதானந்தம், சண்முகநாதன்(இலங்கை), சுசீலாதேவி(இலங்கை), இந்துமதி(சுவிஸ்), உதயமலர்(குமுதா- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சயந்தன், சயதீபன், சசீபன், சஞ்ஜீவன், சாரூபன், கோபிகா, சயரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
துஷிதன், கஸ்தூரி, விந்துஷன், அனோஜ், வினோத், யகிதா, கஜீபன், கஜிந்தா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
ஷன்றியா(சுவிஸ்), ஷ்றியான்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பழனி கோவிலடி, டச்சு வீதி, சாவகச்சேரி எனும் இடத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment