மலர்வு : 17 சனவரி 1933 — உதிர்வு : 10 செப்ரெம்பர் 2016
யாழ். தாவடி பாடசாலை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை கனகம்மா அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கரத்தினம் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
நாகம்மா, பரமசிவம்(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சின்னக்கிளி, பத்மாவதி, சுப்பிரமணியம்(சுவிஸ்), சண்முகநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேந்திரம், அஜந்தா(இத்தாலி, முன்னாள் ஆசிரியை- யாழ். பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம் சுழிபுரம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தெய்வேந்திரம், சந்திரகுமார், சுதாமதி(சுவிஸ்), மலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சமீரா(சுவிஸ்), ஹரிசன்(சுவிஸ்) ஆகியோரின் பெரிய அத்தையும்,
சுசிகரன்(சுவிஸ்), வானுஜா, பிரணவன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
லிஷாலினி(இத்தாலி), துர்க்காலினி, கௌசிக்(கட்டார்), மாதங்கி(இத்தாலி), கெஜதாஸ்(இத்தாலி), கோவைக்குமரன்(யாழ். போதனா வைத்தியசாலை, Radio Graffer) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லதுஷா, ஆராதனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2016 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment