தோற்றம் : 15 பெப்ரவரி 1926 — மறைவு : 9 செப்ரெம்பர் 2016
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கேணியடியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சபாரட்ணம் அவர்கள் 09-09-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லையா சுபத்திரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானசவுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
இரவிச்சந்தர்(ஜெர்மனி), சந்திரிகா, இரவிகரன், இரவிதாஸ், இரவிசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், காலஞ்சென்ற அன்னபூரணம், இரத்தினம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மகேஸ்வரி, தர்மபாலன், மஞ்சுளா, மலர்விழி, மூதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆர்த்திகா, அக்ஷிதா, ரத்ணாங்கி, சித்ராங்கி, பலராம், வித்தகன், மதுமிலன், ஜதுசயன், பவதர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: ஆடியபாதம் வீதி, கேணியடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம். |
No comments:
Post a Comment