Sunday, August 2, 2015

கொழும்பு சூட்க்கேஸ் கொலைக்கும் காரணம் கள்ளக் காதல் தான்: கணவன் வெளிநாட்டில் !

இலங்கையில் நாளுக்கு நாள் கள்ளக் காதல் கொலைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. நேற்று முன் தினம் , கொழும்பு தனியார் பஸ் நிலையத்தில் சூட்கேஸ்க்குள் இருந்து மீட்கப்பட்ட யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகாவின் சடலம் தொடர்பில் மேலும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பு செட்டித் தெருவில் உள்ள XXX என்னும் லாட்ஜில் ரூம் ஒன்றை முதலில் வாடகைக்கு எடுத்துள்ளார் ,கார்த்திகா. பின்னர் இரவு வேளை தான் அங்கே ஒரு ஆண் வந்து கார்த்திகாவை பார்கவேண்டும் என்று கூறி அவரது ரூமூக்குச் சென்றுள்ளார். இவரே பின்னர் அடுத்த நாள் அதிகாலை ரூமை காலி செய்வதாக கூறி ஒரு சூட்கேசுடன் சுமக்க முடியாமல் சுமந்து சென்றுள்ளார்.
கார்த்திகாவின் கணவர் வெளிநாடு ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 7 வயது மகன் ஒருவன் இருக்கிறான். ஆனால் அவன் கார்த்திகாவின் தயாருடன் வாழ்ந்து வருகிறான். கொழும்பில் வசித்து வரும் கார்த்திகா செட்டித் தெருவில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ரூம் போட என்ன காரணம் என்று அறியமுடியாதா நிலையில் பொலிசார் இல்லை. கார்த்திகாவை கொலை செய்த நபர் அவரை ஒரு சூட்கேசில் போட்டு சுமக்க முடியாமல் சுமந்து அதனை எடுத்துக்கொண்டு செட்டி தெருவில் இருந்து ஒரு ஆட்டோ மூலம் ,சபெஸ்­டியன் மாவத்­தையில் உள்ள தனியார் பஸ் நிலை­யத்திற்கு சென்றுள்ளார். அங்கே இருந்து பல பஸ் யாழ் நோக்கி புறப்படும். அதில் ஒன்றில் தான் இதனை ஏற்றிவிட்டு பின்னர் தான் தப்பிக் கொள்ள அவர் முனைந்துள்ளார்.

ஆனால் பாரம் தாங்க முடியாமல் சூட்கேசின் சக்கரம் உடைந்ததால் அதனை தூக்கிக்கொண்டு அல்லது இழுத்துக்கொண்டு அவரால் நீண்ட தூரம் செல்ல முடியவில்லை. அதனால் பஸ்க்கு செல்ல முன்னரே அதனை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் கொலையாளி. கார்த்திகாவின் நெற்றியில் இருந்த பொட்டு , அவர் அணிந்திருந்த ஓம் பென்ரன் என்பனவே அவர் ஒரு தமிழர் என்று காட்டிக் கொடுத்துவிட்டது. பொலிசார் கார்த்திகாவின் படத்தை உடனே வெளியிட அனைத்து இணையங்களும் படத்தை பிரசுரித்து விட்டது. இன் நிலையில் தான் செட்டியார் தெருவில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் பொலிசாருக்கு போன் செய்து தனது விடுதியில் தான் குறித்த பெண் தங்கினார் என்று கூற அவர்கள் அங்கே சென்று CCTV கமராவை எடுத்துப் பார்த்து சந்தேக நபரை தற்போது அடையாளம் கண்டுவிட்டார்கள்.
இருப்பினும் அவர் தப்பிச் சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த 5 வருடங்களாக கொழும்பில் தங்கியிருந்த கார்த்திகாவுக்கும் இன் நபருக்கும் இடையே கடந்த 3 வருடங்களாக கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் காதலனே ஏன் கார்த்திகாவை கொலை செய்யவேண்டும் ? அவர்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்கிறார்கள் பொலிசார். உடலில் அடி காயங்களோ இல்லை வேறு எந்தக் காயங்களோ இல்லை என்கிறார்கள். மூக்கில் இருந்து மட்டும் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. கார்த்திகா எப்படி இறந்தார் ? என்பது போன்ற மேலதிக தகவலை கொழும்பில் உள்ள அதிர்வின் புலனாய்வு நிருபர் தரவுள்ளார். மேலதிக செய்திகள் விரைவில் வெளியாகும். 
http://www.athirvu.com/newsdetail/4366.html

No comments:

Post a Comment