Sunday, August 2, 2015

கடந்த 3 நாட்களாக விமானத்தில் பறந்த ஆட்களுக்கு என்ன நடந்தது ? அதிர்ச்சி


சூரியனில் பாரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டு , கதிரியக்கம் கொண்ட சிறிய துகள்கள் பூமியை தாக்கியுள்ளது. இப்படி நடக்க இருக்கிறது என்பதனை அதிர்வு இணையம் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டது அனைவரும் அறிந்த விடையம். இந்த துகள்கள் பூமையை வந்தடையும் போது பூமியின் வடக்கே உள்ள காந்த புலங்களால் அவை உந்தப்படுகிறது. இருப்பினும் விமானத்தில் பறப்பில் ஈடுபட்ட நபர்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறித்த துகள்கள் பூமியின் மேற்பரப்பில் படிந்துள்ள நிலையில் , கடந்த 3 நாட்களுக்குள் விமானத்தில் வட திசை (நோதேன்) நோக்கி பறந்தவர்கள் , கதிரியக்க பாதிப்புக்கு உட்பட்டிருக்கலாம் என்று , பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
இதனை அடுத்து பிரித்தானியா அரசு உடனடியாக கவனத்தில் எடுத்துள்ளது. தமது நாட்டுப் பிரஜைகள் பலரை பரிசோதித்து அறிக்கை ஒன்றை சாமர்பிக்குமாறு பிரித்தானிட அரசு தற்போது குறிப்பிட்ட விஞ்ஞானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது என மேலும் அறியப்படுகிறது.

No comments:

Post a Comment