Wednesday, July 29, 2015

அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்த ரஜினி-கமல் செல்கிறார்களா?-இப்படியா அவமானம் செய்வது!!

அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்த ரஜினி-கமல் செல்கிறார்களா? - Cineulagam
இந்தியாவே கடந்த இரண்டு நாட்களாக கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது, உயர்த்திரு அப்துல் கலாம் ஐய்யா அவர்களின் இழப்பு ஒட்டு மொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்த, பல இளைஞர்கள் உடைந்து போய் விட்டனர்.
அப்துல் கலாமின் உடல் அவருடைய சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யவுள்ளனர். இதில் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமலும் இவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ளவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/118078/

ஒரு விஞ்ஞானியை,நாட்டின் முன்னாள் ஜனாதிபதியை  அவமானப்படுத்த இதை விட முடியுமா?

எவரோ கதை எழுதி எவரோ திரைக்கதை அமைத்து எவரோ இயக்க,எவனோ பணத்தை கொடுக்க படத்துக்கேற்ற இசையமைப்பாளர் நடிகரை கண்டு பிடித்து எவனோ கடின முயற்சி செய்ய நடிக்க கோடியில் பணம் வாங்கி நோகாமல் எந்தத் தகுதியும் இல்லாமல் நொங்கு குடிக்கும் கூத்தாடிகள் படம் வென்ற ஒரே காரணத்தால் சமூகத்தில் முக்கிய புள்ளிகள்!!அதற்கான மூலங்கள் மூலையில்.....

படிப்போ,தகுதியோ இல்லாத இவர்கள்,நாட்டுக்காக எதுவும் செய்யாத இவர்கள் உழைப்புக்கு மேல பல மடங்கு ஊதியம் பெறும் இவர்கள் முக்கிய தலைவர் சாவில்க்கூட முக்கியமானவராக பார்க்கப்படுவதும் பேசப்படுவதும் சாபக்கேடே!

பொழுதை போக்க வழி தேடி வந்தவையே இந்த நாடகம்,திரைப்படம்,இசை....எல்லாமே!

ஆனால் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய தொண்டாற்றியவர் மறக்கபாட்டு இவர்கள் தேசிய வீரர்களாக பார்க்கப்படுவது அவர்கள் குற்றமல்ல!படித்தும் அறிவு வராத மக்கள் குற்றமே!

அப்துல்கலாம் என்ற மேதையை இதை விட இழிவு படுத்த யாராலும் முடியாது!

இது என் தனிப்பட்ட கருத்து!

No comments:

Post a Comment